Search This Blog

Wednesday, April 17, 2024

#மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை


மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

9 மற்றும் 12ம் அதிபதி

மேஷ ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் மற்றும்  பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். 9ம் அதிபதியான குரு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது நல்ல யோகமான பலன்களை மேஷ ராசி நேயர்களுக்கு  அளிப்பர்.

ராசிக்கு 2ல் குரு அனுகூலமான நேரம் .

உங்கள் ராசியான மேஷத்திலிருந்து  இருந்து இரண்டாம் ராசியான ரிஷப ராசியில் 1 மே 2024  அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். தனம் ,வாக்கு , குடும்பம் ,நேத்திரம் ஹயவற்றை குறிக்கும் 2 ம் இடத்தில் குரு சஞ்சரிக்க இருப்பது யோகமான பலன்களை மேஷ ராசி நேயர்களுக்கு இந்த கால கட்டத்தில் குரு பகவான் வாரி வழுங்குவார். தனகாரகர் குரு தன ஸ்தானத்தில் வருவது மேஷ ராசி நேயர்களுக்கு குரு பலத்தை தரும். பணவரவு சரளமாக இருக்க போகிறது. மேஷ ராசி நேயர்கள் குரு பலம் அடைய பெற்று இது நாள் வரை தடை பெட்ற்  திருமணம் இந்த கால கட்டத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும் மற்றும் செல்வத்தை குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் தீவிரம் இருக்கும். ஒரு குழந்தை பிறப்பது வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும்.



குரு பார்வை 6,8,12

இந்த பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் குரு மேஷ ராசிக்கு  6 வது வீடு, 8வது வீடு மற்றும் 10வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.

உங்கள் எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளை பெறுவீர்கள் . உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும். தீராத கடன் இந்த காலகட்டத்தில் தீரும்.

ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தை குரு பகவான் இந்த கால கட்டத்தில் பார்வை இடுவது உங்கள் ஆயுள் விருத்தி அடையும்.



ஜீவனஸ்தானமான 10ம் இடத்தை குரு பார்வை இடுவது தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமையும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

2024ல் உங்கள் முடிவுகள் புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் இருக்கும்.  மேலும் மதம் மற்றும் ஆன்மீகம் விஷயத்தில் நாட்டம் அதிகம் ஆகும். உங்கள் அதிர்ஷ்டம். கூடும்.

குரு அஸ்தங்கம்

மே 3  2024 முதல்  ஜூன் 3 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில்  நிலையில் இருக்கும் போது, ​​நீங்கள் உங்கள் வேலையில் அதிக முயற்சிசெலுத்த  வேண்டும். உங்கள் பேச்சின் மூலம் யாரிடமும் தவறாக பேச வேண்டாம்.



குரு வக்கிரம்

இருப்பினும், குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, உங்கள் நிதி வளர்ச்சி பாதிக்கப்படலாம்.அல்லது முன்பை விட குறைவான பணம் சம்பாதிக்கலாம்.  இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்தலாம் மற்றும் கடினமாக உழைக்கலாம். உங்கள் தொழில் மெதுவாக செழித்து, பொருளாதார ஆதாயங்களுக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும்.

தொழில் வளர்ச்சி அல்லது வேலையில் முன்னேற்றம்

2024-2025ல் ரிஷப ராசியில் குரு ராசிக்கு 2ம் இடத்தில  சஞ்சாரம் செய்யும் போது, உங்கள் தொழிலில் வளமாக இருக்கும்,  உங்கள் தொழிலில் தைரியமானமுடிவுகளை எடுப்பீர்கள். இது உங்கள் தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். 2024-2025ல் உங்கள்  நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். 2024ல் போதுமான அளவு செல்வம் மேஷ ராசி நேயர்களுக்கு வந்து சேரும். தொழிலில் பெரிய வெற்றி வாய்ப்புகள் உள்ளன.

மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்



மாணவர்கள்

2024. மேஷ ராசி நேயர்கள் சிலர் வெளிநாட்டில் உயர் கல்வியைத் தொடர்வீர்கள்.. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள், வெற்றியை அடைவீர்கள். மேலும் நீங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள் . கல்வியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.

மேஷ ராசியின் கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

2ல் குரு , 12ல் ராகு , 6ல் கேது , 11ல் சனி

மேஷ ராசிக்கு குரு பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

·        பண வரவு சரளமாக இருக்கும்.

·        சாதூர்யமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள்.

·        உங்கள் தொழில் அல்லது உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

·        குடும்பத்தில் சுப காரியங்களுக்கு பஞ்சம் இருக்காது

·        உங்கள் செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு உயரும் .

·        புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்

·        புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் வேலையில் பதவி உயர்வு உண்டாகும்

·        வருமானம் பெருகி கடன் தொல்லை தீரும்

·        எதிரிகள் தொல்லை நீங்கும்

·        வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்

·        உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் காணும்

·        வீடு , வாகனம் , தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்


Friday, April 12, 2024

#சந்நியாசி ஆகும் அமைப்புள்ள ஜாதகர் யார் ?# #கௌதம புத்தர் , பரமாச்சியார்...


#சந்நியாசி ஆகும் அமைப்புள்ள ஜாதகர் யார் ?#

#கௌதம புத்தர் , பரமாச்சியார் ஜாதகம் என்ன சொல்கிறது ?#

ஜாதகத்தில் சந்நியாசி யோகம்

சந்நியாசி யோகம் என்பது ஒரு ஜாதகத்தில் சில குறிப்பிட்ட கிரக அமைப்புகள் காணப்படும்போது, அந்த ஜாதகர் துறவு வாழ்க்கையை ஏற்கக்கூடும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது பிரவ்ராஜ்ய யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சந்நியாசி யோகம் உள்ள ஜாதகர்கள், உலக இன்பங்களில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மீக தேடலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?

பத்தாம் ஸ்தானம் கர்ம ஸ்தானம், காரிய ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், பத்தாம் ஸ்தானம் ஒவ்வொருத்தரும் விரும்பி பார்க்கும் கேட்கும் ஸ்தானமாகும் ஏன்னென்றால் இந்த பிறவியில் எந்த செயல் செய்து பிழைக்க போகிறார் அதாவது எந்த தொழிலை செய்ய போகிறார், எப்படி  செய்ய போகிறார் போன்றவற்றை காட்டும் ஸ்தானம் இருப்பார்கள்.

உண்மையமான சன்யாசி

சூரியன் சனிசெவ் வாயும் தொடரவே இரண்டின் கோளன் காரிய ஐந்தின் நாதன் தன்னொடும் கலந்து நின்றால் வீரியம் தன்னை நீக்கி வெறுத்துச்சந் நியாசி யாவான் ! சீரிய திரியாம் கைம்பெண் தன்னையும் தீண்டான் என்னே !

(இ-ள்) சூரியன் சனி செவ்வாய் ஆகிய மூவரும் இணைந்திருக்க இவர்களோடு இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் சேர்ந்திருந்தால் ஜாதகர் சிற்றின்பப் போகத்தை வெறுத்தொதுக்கிச் சன்யாசி ஆவர்கள். ஒரு விதவைப் பெண்ணைக்கூட தவறான எண்ணத்தோடு தொடமாட்டான்

(கடகம் & தனுசு லக்கினத்திற்கு சூரியன் + செவ்வாய் + சனி இவர்களின் சேர்கை சன்யாசி வாழ்வைத்தரும்.)

புத்தரின் ஜாதகத்தில் உள்ளது.

புலிப்பாணி

கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க

கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்

ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்

அப்பனே தபசியடா யோகிஞானி

கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்

குவலயதில் புனிதனடா ஞானியோகி

வீளப்பா விண்ணுலகத் தேவரோடு

விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே

 -விளக்க உரை- இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.              

Tuesday, March 12, 2024

கிரஹங்கள் நிஷ் பலன் என்ன பலன் ? ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் நிஷ் பலம் ...


கிரஹ நிஷ் பலம்

கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்து விடக்கூடாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன. அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.



கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள்

(1) வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்
(2) திசையினில் வலிமை (அ) திக் பலம்
(3) காலத்தில் வலிமை (அ) கால பலம்
(4) நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்
(5) இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்
(6) பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

ஸ்தான பலம் – கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை

(1)உச்சம்
(2)மூலத் திரிகோணம்
(3) ஆட்சி
(4)நட்பு
(5)பகை
(6)கேந்திரம்
(7)திரிகோணம்
(8)பணபரம்
(9)ஆபோக்லிமம்

                              திக் பலம்

புதன்,குரு -கிழக்கிலும் -(அ) லக்னத்திலும்

சனி -மேற்கில் -(அ)7 ல்,

சந்திரன்,சுக்கிரன் -வடக்கிலும் -(அ) 4 லும், திக் பலம் உள்ளவர்கள் .

சூரியன்,செவ்வாய்,தெற்கிலும் -(அ)10 லும் திக் பலம் அடைவார்கள்



நிஷ் பலம்

நிஷ் பலம் என்பது கிரஹங்கள் வலுவிழந்த நிலையை குறிக்கும். ஒரு கிரகம் நீச்சம் அடைந்தால்  என்ன பலன் தருமோ அதே பலனை நிஷ் பலம்  பெற்ற கிரகம் தரும்.

குருவும் புதனும் நிஷ் பலம்

லக்கினத்தில் குரு பகவானும் புத பகவானும் திக் பலம் பெறுவார்கள். லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில குருவும் புதனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை)அடைவார்கள்.

புதன் நிஷ் பலம்

 நிஷ்பலம் அடைந்த கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்தால் நிஷ் பலம் நீங்கி நன்மையான பலன்களையே தருவார்கள். உதாரணமாக மீன லக்கினத்திற்கு புதன் பகவான் 7ம் இடமான கன்னியில் அமையப்பெற்றால் நிஷ் பலம் அடைவார்.ஆனாலும் புதன் கன்னியில் ஆட்சி , உச்சம் , திரிகோணம் அடைவதால் புதன் வலுப்பெற்று பஞ்சமகா புருஷ யோகமான பத்திர யோகத்தை தருவார்.

சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம்

லக்கினத்தில் இருந்து 4ம் இடத்தில் சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில் இருந்து 10 இடத்தில் அமைந்தால் சுக்கிரனும் சந்திரனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள். உதாரணத்திற்கு , கடக லக்கின ஜாதகருக்கு சுக்கிரனும் , சந்திரனும்  10ம் இடத்தில் அமைந்தால் நிஷ் பலம்  (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சந்திரன்  பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் நிஷ்  பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில்  சந்திரன் மிகவும் பிரகாசமாக  இருக்க மாட்டார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு  சந்திரன்  அதிகம் பிரகாசமாக . அப்பொழுது சந்திரன்  4ம் இடத்தில்  திக் பலம் அடைந்து காணப்படுவார். 



சனி நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில் சனி திக் பலம் அடைவார்.  லக்கினத்தில் சனி அமர்ந்தால் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்.

சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 10ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில்  இருந்து 4ம் இடத்தில அமர்ந்தால்  சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சூரியன் பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் திக் பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில் சூரியன் மிகவும் பிரகாசமாக இருப்பார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு சூரியனின் தாக்கம் அதிகம் இருக்காது. அப்பொழுது சூரியன் 4ம் இடத்தில் நிஷ்பலம் அடைகின்றார் .

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார் என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுக்கிரன் நீச்சம்

மிதுன லக்கினத்திற்கு 4ம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் அடைவார் . ஆயினும் சுக்கிரன் 4ம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு திக் பலம் பெறுவதால் யோகமான பலன்களை தருவார். அதாவது சுக்கிரன் நீச்சம் பங்கம் அடைந்து ராஜயோகத்தை  தருவார். மிதுன லக்கின 4ல் அமர்ந்த சுக்கிரன் சொத்து, வாகன யோகம் , மனைவி ,பெண் சுகம் , தாயாருக்கு மேன்மை போன்ற யோகப்பலன்களையே சுக்கிர பகவான் தருவார் என்பதை நாம் உணர வேண்டும். 

இதே சுக்கிர பகவான் மிதுன லக்கினத்திற்கு 10ம் இடத்தில் அதாவது மீனத்தில் உச்சம் பெற்று  அமர்ந்தால் , அவர் நிஷ்பலம் அடைவதால் யோகப்பலன்களை குறைத்து  கொடுப்பர்.



செல்வி ஜெயலலிதா ஜாதகம்.

உதாரணமாக செல்வி ஜெயலலிதா ஜாதகம். மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.. சிறை செல்ல நேரிட்டது. நிஷ்பலம் அடைந்த சுக்கிரன் யோகத்தை கொடுத்து பின்னர் சுக்கிர பகவானே அதனை கெடுத்தார் என்பதை நாம் உணர  வேண்டும்.

உதாரணமாக துலா லக்கின ஜாதகத்தில் 2 மற்றும் 7க்கு உடைய செவ்வாய் 10 இடத்தில நீச்சம் பெற்று அமைந்தால் அவருக்கு நல்ல குடும்பம் அமையாது , உயர் கல்வி அமையாது , திருமண வாழ்கை சிறப்புற்று இருக்காது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் செவ்வாய் 10ம் இடத்தில் திக்பலம்  பெற்றதால் யோகமான வாழ்வே அமையும் . நல்ல வேலை  அல்லது தொழில் , அரசு வேலை , அதிகாரமிக்க வேலை , காவல் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் நிலையை 10ல் திக்பலம் பெற்ற செவ்வாய் ( நீச்சம் அடைந்த செவ்வாய்) தருவார்.



இதே செவ்வாய் துலா லக்கின ஜாதகத்தில் 4 ல் உச்சம் பெற்று காணப்பட்டால் அவர் 4 ம் இடத்தில் நிஷ்பலம் பெரும் நிலையை அடைவதால் யோகப்பலன்களை ஜாதகருக்கு குறைத்து கொடுப்பார்.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார்.

மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .


Thursday, March 7, 2024

திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று 12 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய ச...


திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று  12

 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சங்கு!


சிவராத்திரிக்கு முந்திய நாள் தோன்றிய

 நன்னீர்க்குளம். சங்கு

பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம்தான்.

நான்கு யுகங்களிலும் இரண்டு கழுகுகள் தினமும் இந்த மலைக்கு வந்து ஈசனை வழிபட்ட காரணத்தால் இந்தத் தலத்துக்கு, 'திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் உண்டானது என்கிறார்கள். கழுகுகள் உச்சிவேளையில் வந்து ஈசனை வழிபட்டு அங்கு வழங்கப்படும் பிரசாதத்தி உண்டு செல்லும் நிகழ்வைப் பலரும் தரிசித்திருக்கிறார்கள்.



மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது.

2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு சங்கு தோன்றியது. அதன்பின் 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று மீண்டும் சங்கு தோன்றிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. 

பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் இந்தத் தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம். இந்த முறை தோன்றியிருக்கும் அந்த சங்கில் சங்குப்பூச்சி இன்னும் உயிருடன் உள்ளது. எனவே சங்கை மண்டபத்தில் ஒரு தட்டில் வைத்து நீர் விட்டு அதில் வைத்திருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று சங்கு தோன்றியிருப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று 12 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சங்கு! சிவராத்திரிக்கு முந்திய நாள் தோன்றிய நன்னீர்க்குளம் சங்கு பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம்தான். 



நான்கு யுகங்களிலும் இரண்டு கழுகுகள் தினமும் இந்த மலைக்கு வந்து ஈசனை வழிபட்ட காரணத்தால் இந்தத் தலத்துக்கு, 'திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் உண்டானது என்கிறார்கள். கழுகுகள் உச்சிவேளையில் வந்து ஈசனை வழிபட்டு அங்கு வழங்கப்படும் பிரசாதத்தி உண்டு செல்லும் நிகழ்வைப் பலரும் தரிசித்திருக்கிறார்கள். மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது.



 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு சங்கு தோன்றியது. அதன்பின் 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று மீண்டும் சங்கு தோன்றிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் இந்தத் தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம். 

இந்த முறை தோன்றியிருக்கும் அந்த சங்கில் சங்குப்பூச்சி இன்னும் உயிருடன் உள்ளது. எனவே சங்கை மண்டபத்தில் ஒரு தட்டில் வைத்து நீர் விட்டு அதில் வைத்திருக்கிறார்கள். மகாசிவராத்திரி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று சங்கு தோன்றியிருப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.


Monday, February 26, 2024

ஜாதகத்தில் ப்ரம்ம சாபம் அல்லது குரு சாபம். பராமச்சரியருக்கு குரு துரோகம்...


 

பிரம்ம சாபம்  அல்லது குரு சாபம்

குருவை அவமதிப்பது கேலி, கிண்டல் செய்வது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது, குரு நிந்தனை செய்வது, நமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் இருப்பது நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.

பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.படித்தது மறந்து விடும்.



ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்க்கை பெற்று ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாமிடம் சம்பந்தப்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் ஆகும். குரு சாப தோஷம் என கொள்ளலாம்.

உக்கடம் தருபவன் காரகன் குரு இவ்வாறு சனியால் பாதிக்கப்பட்டால் புத்திர பாக்கியம் இல்லை .ஆண் குழந்தை முக்கியமாக இருக்காது.

சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி

தன்னுடைய குருவான பரமாச்சியாரை ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவமானம் அடையச்செய்தவர் ஜெயேந்திரர். உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ததை போல் தன்னை வளர்த்து ஆளாக்கிய பரமாச்சியாரை துன்புறுத்திய ஜெயேந்திரர். இதனால் பின்னர் கொலை வழக்கில் சம்மந்தபட்டு சிறை செல்ல நேரிட்டது. குருவுக்கு செய்த துரோகத்தால் பின்னர் பல துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது.

 ஜெயேந்திர சரஸ்வதி 1935ம் ஆண்டு திருவாரூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார்.

80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்.

குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார்.சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு.

ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார்.

சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர்.

1987 அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.



முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி 1954 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி  இளைய பீடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதியை அறிமுகம் செய்து வைத்தார்.

 40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது காஞ்சி மடத்தின்  பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

மறைந்த காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் 1980 களின் மத்தியில் மடாதிபதிகளுக்கு உரிய தண்டத்தை வைத்துவிட்டு திடீரென காஞ்சி சங்கர மடத்தை விட்டு ஓடி போனார். 

இவருக்கும் பரமாச்சியாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இது நிகழ்ந்தது . ஜெயேந்திரர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரமாச்சிரியர் நிராகரித்ததால் கோபம் அடைந்து காஞ்சி மடத்தை விட்டு வெளியேறினார் என்று கூறப்பட்டது.


அப்போது மூத்த அரசியல் தலைவராக மற்றும் ஜனாதிபதியாகவும் இருந்த R வெங்கட்ராமன்  இதில் தலையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தார்.

2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தபோது, ஜெயலலிதாவின் அகங்காரமே அதற்குக் காரணம் என்று ஜெயேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

அதேபோல் மடாதிபதியாக இருந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.

நவம்பர் 11, 2004 ஆண்டு காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

>ஜனவரி 10, 2005  சங்கர்ராமன் கொலைவழக்கில் இருந்து, ஜெயேந்திரருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுத்து சங்கராச்சாரியார் தீர்ப்பை மாற்ற முயல்வதாக 2011 ஆகஸ்டில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.



சங்கராச்சாரியாரும் நீதிபதியும் பேசுவதாகக் கூறப்பட்ட ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

>நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.

>மார்ச் 2011ல் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை  ஜெயந்திரர் துவங்கினார்.

>பிப்ரவரி 28, 2018 ஆம் ஆண்டு மூச்சு திணறல் காரணமாக   ஜெயந்திரர் சரஸ்வதி   மரணமடைந்தார். 

ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது

2004-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசால் அதிரடியாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். ஜெயேந்திரருடன் இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் குறித்த ஏராளமான வெளிவராத தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

அடுத்தடுத்து புகார்கள்

 மூத்த எழுத்தாளர் அனுராதா ரமணன், ஜெயேந்திரர் தம்மிடம் தவறாக நடக்க முயன்றார் என பகிரங்கமாக புகார் தெரிவித்தார். விஜயேந்திரருக்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது என்கிற தகவலும் அப்போது கசிந்து பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Saturday, February 17, 2024

ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்றால் வேலை கிடைக்காதா? தொழில் அமையாதா ?


ஜாதகத்தில் சூரியன் நீசன் ஆனால் அரசாங்கத்தில்  கடைநிலை ஊழியர்  வேலை கூட கிடைக்காது என்றார்களே உண்மையா?

கிரகங்களின் நாயகனாக விளங்கும் சூரியன் ஜோதிடத்தில் ஆத்ம காரகன் என்றும் தந்தை காரகன் என்றும் போற்றப்படுகிறார். மேலும் அரசு  அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள், நாட்டுத் தலைவர்கள், நாட்டை ஆள்பவர்கள், நமக்கு தலைவராக இருப்பவர்கள் போன்றவர்களுக்கு சூரியன் காரகம் வகிக்கிறார்.



சூரியன் ஒரு ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் அல்லது 10ம் வீட்டில் திக் பலம் பெற்று காணப்பட்டால் ,அந்த ஜாதகருக்கு தலைமை தாங்கும் பண்பு இருக்கும். அரசாங்க உத்தியோகம் மற்றும் அரசாங்க ஆதரவு கிட்டும். தந்தையின் ஆதரவு இருக்கும். அதிகாரத் தோரணை இருக்கும். நல்ல உடல் வாகும் கம்பீரமான தோற்றமும் இருக்கும். அதிகாரப் பதவிகள் திடீர் என்று வந்து சேரும். மனோதிடத்துடன் செயல்படுவார். நிர்வாகத்திறன் சிறப்பாக இருக்கும்.

சூரியன் நீசம் அடையும் இடம் துலா ராசியாகும். ஆக, ஐப்பசியில் பிறந்த அன்பர்களுக்குத்  ஜாதகத்தில் துலா ராசியில் சூரியன் நீச்சம்  அடைந்து காணப்படுவார். இவர்களுக்கு தகப்பனாரின் ஆதரவும் அரசு உதவிகளும் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

சூரியன் ஒருவரது ஜாதகத்தில் நீசமாக இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். அரசாங்க ரீதியிலான ஆதாயங்கள் கிட்டாது. தனிமையில் இருக்க நேரிடும். சமூக அந்தஸ்து குறையும். அவமரியாதைகளை சந்திக்க நேரும். 

ஆனால் ஜாதகத்தில் துலாத்தில் சூரியன் நீச்சம் பெற்று காணப்பட்டாலும் , சூரியனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் ஏற்பட்டால் ராஜயோகமான வாழ்வு அமைகிறது.

ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் இருந்தால் , வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார்.  ஒரு கிரகம் நீசம் பெற்றால் பலன்கள் எதையும் கொடுக்காது என்பது ஜோதிட விதி ஆனால் நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும்போது வலுவான நிலையை அடைந்து பெரும் பலன்களை தருகிறது.

இதனால் அவருக்கு எளிதில் தலைமை பதவிகள் தேடி வரும் சூழல் உண்டாகும்.‘எதிரிகளை அடக்கி ஆளும் திறன் கிடைக்கும்,

தொழில், உறவுகள் அல்லது தனிப்பட்ட குணங்கள் உள்ளிட்டவை உயர்ந்து நெருக்கம் அதிகமாகும்.

நீச்ச பங்க ராஜ யோகம், பலவீனமான கிரகத்துடன் தொடர்புடைய சவால்களை சமாளிக்க ஜாதகருக்கு உதவுகிறது, ஜாதகர்களின்  அசாத்திய திறனை  அவர்களுக்கு உணர வைக்க இந்த யோகம் அவர்களுக்கு  உதவும்.

சில புகழ் பெற்ற " கடைநிலை ஊழியர்"களின் சூரியன் நீசம் பெற்ற ஜாதகங்கள் உங்கள் பார்வைக்கு ;-

பில்கேட்ஸ் ஜாதகத்தில் சூரியன் நீசம் !

உலகிலேயே பணக்கார சூரியன் நீசம் பெற்ற கடைநிலை ஊழியர்  ! மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் ரிஷப லக்கினம் .மீன ராசி. இவருடைய ஜாதகத்தில் 4ம் அதிபதியான சூரியன் 6ம் இடத்தில நீச்சம். ஆனால் அங்கு சுக்கிரன் ஆட்சி பெற்று காணப்படுவதால் நீச்ச பங்க ராஜ யோகம். ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும் போது மிகவும் வலுவான நிலையை அடைந்து அபரிமிதமான யோக பலனைத் தருகிறது. நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்த ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றால் அது நீசபங்க ராஜ யோகம் என்ற அமைப்பைத் தருகிறது.

உலகில் உள்ள மற்ற நாடுகள், இந்த கடைநிலை ஊழியர்  சேவையை எதிர்பார்த்து நிற்கின்றனர் !


உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தில் சூரியன் நீசம்

இந்த அழகிக்கு சூரியன் நீசம் !  இவர் ஒரு அழகான பெண்!

இவர் மட்டும் ஆளும் கட்சியில் சேர்ந்தால், இவருக்கு அரசாங்கம் ஆளுமை பதவியை தருவதற்கு தயாராக உள்ளது.

ஐஸ்வர்யா ராய் கன்யா லக்கினம் மற்றும் தனுசு ராசியில் பிறந்துள்ளார். இவருடைய 12 ம் அதிபதியான சூரியன் இவருடைய ஜாதகத்தில் 2ல் நீச்சம்.  நீச்சன் சூரியன் நின்ற ராசி நாதனான சுக்கிரன் கன்யா லக்கினத்திற்கு கேந்திர ஸ்தானமான 4ம் வீட்டில் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். இதனால் தான் இவர் உலக அழகியாக தேர்ந்து எடுக்க. பட்டார்  மேலும் இன்றும் கலை துறையில் சாதனை படைத்தது வருகிறார்.



கலைஞானி கமல ஹாசன் ஜாதகத்தில் சூரியன் நீசம்

கலைஞானிக்கு சூரியன் நீசம், அதனால் தான் சினிமாவில் அவருக்கு கடைநிலை ஊழியர்  வேடம் அதிகம் கிடைக்கிறது ! கமல ஹாசன் சிம்ம லக்கினம் மற்றும் மீன ராசியில் பிறந்துள்ளார். இவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதியான சூரியன் 3ம் இடத்தில நீச்சம் பெற்றுள்ளார். அங்கேயே சனி உச்சம் பெற்றதால் சூரியனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் அடைய பெறுகிறது.

என்ன கொஞ்சம் குஜாலான கடைநிலை ஊழியர்    !

தேர்தலில் நின்று சேவை செய்ய  டார்ச் லைட்டுடன் அலைகிறார் ! கண்டிப்பாக சேவையும் செய்வார்

 


நடிகை அமலா பால் ஜாதகத்தில் சூரியன் நீசம்

இவர்  கேரள கடைநிலை ஊழியர் ஆவார்.

நடிகை அமலா பால் தனுசு லக்கினம் ரிஷப ராசியில் பிறந்துள்ளார். இவருடைய ஜாதகத்தில் 9ம் அதிபதியான சூரியன் 11ல் நீச்சம்.. ஆனால் 11ம் அதிபதியான சுக்கிரனும் 9ம் அதிபதியான சூரியனும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவதால் நீச்ச பங்க ராஜ யோகம் .

சிறந்த கலை சேவை செய்து சிறந்த சேவை செய்கிறார் !



இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஜாதகத்தில் சூரியன் நீசம்

இவருக்கு சூரியன் நீசம்! படேல் மேஷ லக்கினம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தார். இவருடைய ஜாதகத்தில் 5ம் அதிபதியான சூரியன் 7ல் நீச்சம் ஆனால் நீச்சன் நின்ற ராசிநாதனான சுக்கிரன் 7ம் இடத்திலேயே ஆட்சி பெற்றதால் நீச்ச பங்க ராஜயோகம்.

உலகிலேயே மிக உயரமான மனிதராக நிற்கிறார் !

அரசில் உயர் பதவியில் இருந்த IRON MAN !



குபேரன் ஜாதகத்தில் சூரியன் நீசம்

ஒரு புராண கால ஜாதகம் !

திருப்பதி பாலாஜிக்கே "வாரா" கடன் கொடுத்தவர் !

 குபேரன் மீன லக்கினம் தனுசு ராசியில் பிறந்தவர் ஆவார். இவருடைய ஜாதகத்தில்  6ம் அதிபதியான சூரியன் 8ல் நேசம் . இத்தகைய அமைப்பு விபரீத ராஜ யோகம் என்று அழைக்க படும். நீச்சன் நின்ற ராசியாதிபதி  சுக்கிரன் லக்கின திரிகேந்திரம் ஏறியதால் நீச்ச பங்க ராஜ யோகம்.

ஹிட்லர்  ஜாதகத்தில் சூரியன் உச்சம்

சூரியன் உச்சம் !



வஞ்சப்புகழ் என்னும் வார்த்தைக்கு உதாரணம் ! ஹிட்லரின் ஜாதகத்தில் 11ம் அதிபதியான சூரியன் 7ல்  உச்சம். ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் தலைக்கனம் ஏற்படும். மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள் . தாங்கள் சொல்வதையே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். இதனால்தான் ஹிட்லர் சர்வாதிகாரியாக திகழ்ந்தார்.  பல லட்சக்கணக்கான யூதர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று தீர்த்தவர். இரக்கமே இல்லாத மனிதராக இருந்தார் இவர்

ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் சூரியன் உச்சம்

ஸ்ரீ ராமர் கடக லக்கினம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர் ஆவார். இவருடைய ஜாதகத்தில் 2ம் அதிபதியான  சூரியன் 10ல்  உச்சம் . 4ம் இடத்தில சனி உச்சம் . உச்சம் பெட்ற சூரியனை உச்சம் பெட்ற சனி பார்ப்பதால் சூரியனுக்கு நீச்ச நிலை ஏற்படுகிறது. உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்  என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது. இதனால் தான் இவர் அரச குலத்தில் பிறந்தாலும் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும் நிலை ஏற்பட்டது.